Wednesday, October 5, 2011

எல்லாம் வேண்டும் எனக்கு!

எனக்கென்று ஒரு உலகம், எனக்காக ஒரு தோழி,
கடற்கரையில் சிறு வீடு, களங்கமில்லா ஒரு நிலா
எண்ண எண்ணக் கவிதை, எழுத எழுதக் காகிதம்...
விடியும் வரைக்கும் ஒரு விளக்கு.. உறங்கும் வரைக்கும் ஒரு புத்தகம்!
தட்டி எழுப்பத் தாய், தொட்டுத் தடவ நாய்க்குட்டி!
எட்டும் தூரத்தில் எப்போதும் திருக்குறள் , மழை கொட்டும் நேரத்தில் ஒரு கோப்பை தேநீர்!
பிரிந்து போன காதலின் நினைவு, பின் அழுகையே இல்லாமல் ஒரு துளி கண்ணீர் !

எல்லாம் வேண்டும் எனக்கு!.. இவை இல்லாத வாழ்க்கை எதற்கு ?!